வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்

Saturday, September 22, 2012

அனுபவம்

கடந்த வாரம் எனது நண்பன் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு  இணையத்தளம் மூலம்  ரயில் பயணத்திற்கு  முன்பதிவு செய்திருந்தார்,.

பயனசீட்டையும் கையில் வைத்திருந்தார். ஆனால் அசல் அடையாளை அட்டையை அலுவலகத்திலேயே விட்டு வந்து விட்டார்.

தைரியமாக ரயிலில் ஏறி அமர்ந்தவர் சற்று நேரத்தில் உறங்க ஆரம்பித்து விட்டார். பயண சீட்டு பரிசோதகர் வந்தார் .. அடையாள அட்டை கேட்டார்.. பாவம் நம்மவர்..

பரிசோதகர் : அதிக பட்ச அபராத கட்டணம் செலுத்துங்கள் இல்லையேல் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விடவேண்டுமென்று கூறிவிட்டு சென்று விட்டார்..


நம்மவர் தைரியமாக உறங்கிவிட்டிருக்க..
 மீண்டும் வந்தார் பரிசோதகர்.. நண்பர் இக்கட்டான சூழலில் விழிக்க.. வீசினார் வலையை .. சரி சரி !! என்னை கவனியுங்கள் நான் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறேனென்று எந்திரன் ஸ்டைலில் கண்ணால் ஜாடை காட்ட .. (ஒரு காந்தி நோட்டை வேறு வழியின்றி கொடுத்து தொடர்ந்து பயணித்தார்.

நண்பர்களே இது போன்ற சூழலை தவிர்க்க பயணத்தின் போது  தவறாமல் அசல் அடையாள அட்டையை பத்திரமாக எடுத்து செல்லுங்கள்.
உங்கள் தொலை பேசி மற்றும் அலைபேசி எண்களை அதனோடு குறித்து இணைத்து வையுங்கள். ஏனெனில், தவற விட்டாலும் ந(ம்)ல்லவர்கள் கையில் கிடைத்தால் அதை  உங்களிடம் ஒப்படைக்க அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

இல்லையேல் எடுத்தவர்கள் சிரமம் பாராமல் அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டால் உரியவர்களிடம் எளிதாக சேர்க்க முடியும்.
என்ன.. பைன் கட்டி தான் வாங்க வேண்டும். இது போல் சில முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நிறைய சூழல்களில் இக்கட்டை தவிர்க்க முடியும்.

என்ன நண்பர்களே!! முடியும் தானே.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

www.stgroup.co.in
kulandhaivels@gmail.com

Wednesday, December 1, 2010

v

kulandhaivels@gmail.com

Friday, October 1, 2010

எந்திரன் - விமர்சனம்

எந்திரன் - விமர்சனம் அல்ல.



எந்திரன், ஏ.ஆர்.ரகுமான், ரஜினி
நம்ப சூப்பர் ஸ்டார்ட் எந்திரன் படம் முதல் நாள் ... முதல் ஷோ... பார்க்காம இருந்தா எப்படி....? சுட சுட படத்த பார்த்து இதை எழுதறேனுகோ.

ஒரு வழியா முட்டி மோதி டிக்கெட் வாங்கி படத்த பார்த்த பிறகு கிடைக்கும் திருப்தி இருக்கே... அட அட..... ரஜினி ரஜினி தான். வயசானாலும் அவருடைய ஸ்டைலே தனி தான். இன்னும் எத்தனை வரும் ஆனாலும் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பது நிஜம்.

படத்தின் கதையை சொல்லிவிட்டால் சுவாரிசியம் இருக்காது. படத்த பார்த்துவிட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

'பிரமாண்ட இயக்குனர்' சங்கர் - கனவு படத்தை எடுத்த திருப்தி + வெற்றிகரமாக ஓடவைத்து இருக்கிறார். திரைகதையை கையாண்ட விதம் மிக அருமை. ரஜினி என்ற நடிகரை தனது இயக்கத்தில் முற்றிலும் மறைத்து கதையின் நாயகனாக உலா விட்டிருப்பது சிறப்பு. நல்ல வேலை.... ரஜினிக்கு ஒபெனிங் சாங் வைக்காமல் புண்ணியம் செய்துகொண்டார். கடைசி 30 நிமிஷம் நன்மை கட்டிபோடுகிறார். படம் முழுவதும் கிராபிக்ஸ் மிரட்டல்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி - இரட்டை வேடத்தில் மனுசர் சும்மா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். என்திரனாக அவரது நடிப்பும் இடைவேளை வரும்போது மானும் அவரது முகபாவனைகள்.... நடிப்பில் சும்மா சென்சுரி அடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் டயலாக், மிரட்டல் சண்டைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ....
'இரட்டை ஆஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் - சங்கரை போலவே படம் முழுவதும் இவரது இசை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருதியை தருவதை நம்பால் நிச்சயம் உணர முடியும். காதல் அணுக்கள் & கிளிமஞ்சாரோ பாடல்கள் முனு முணுக்க வைக்கிறது. மற்றவைகள்...சுமார் தான். இறுதியில் SBP சார் படம் ஒரு குறும் பாடல் அழகு. ரகுமானை தொடர்ந்து விரைவில் சங்கரும் ஹாலிவுட் சென்றுவிடுவார்.

'தயாரிப்பு' சன் பிச்சர் - சங்கரின் கனவை நினைவாகிய பெருமை இவர்களையே சாரும். இந்த படத்தை இவர்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதே நிஜம். சாதாரண படத்தையே நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடுவார்கள். என்திரனை சொல்லவா வேண்டும்? படமும் சூப்பர் ஹிட். சன் இனி துணித்து பல படங்களை எடுக்க வருவார்கள். நாள் படங்களை எடுத்தால் நன்று. வாழ்த்துக்கள்.



'முன்னால் உலக அழகி' ஐஸ்வர்யா ராய் - ஜீன்ஸில் பார்த்த ஐஸ் இதில் மிஸ்ஸிங்... முடித்த வரை கதையின் ஓட்டத்தில் வருகிறார். ரஜினிக்கு பல முத்தங்களை தந்து அவ்போது நம்மையும் சூடேற்றுகிறார். முகத்தில் வயதான தோற்றம் நன்கு தெரியுது.

சந்தானம், கருணாஸ், மறைந்த ஹனிபா - சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

ரசுல்குட்டியும் இரண்டாம் பாதியில் மிக அதிகமாக வேலை செய்துள்ளார். சபாஸ்.


ரொம்ப ரசித்தது

* கிளிமஞ்சாரோ பாடல்
* ரோபோ ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் இடமும்

* ராகவ் வரும் காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த ரயில் சண்டை.... யம்மாடி.... சான்சே இல்ல.

* ஹனிபாவுடன் போட்டிபோட்டு பேசும் இடம்.... ஹைலைட்.

* எஜமான் படத்துல பட்டம் பூச்சி பிடிப்பது போல இங்கே கொசுவை தேடி போவதும் அதன் பிறகு நடப்பது ரசிக்க கூடியவைகள்.

* காதல் காட்சியில் 'ஐஸை' முத்தம் திருப்பி தர கேட்டு மடக்கும் காட்சியில் ரஜினி - மாஸ் தான்.


முதல் பாதி - சிரிப்பு வெடி
இரண்டாம் பாதி - கிராபிக்ஸ் மிரட்டல்

எந்திரன் = கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.






kulandhaivels@gmail.com
thanks to kolipaiyan

Sunday, August 29, 2010

என் இதயத்தின் யோசனை.



உன்னை பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே..................


இந்த வரிகளின் வலியை
இன்று நான் உணர்ந்தேன்..

காதல் கூடமும் போர்க்களம் தானோ?

அதனால் தான் நீயும் என்னை
எதிரியாய் பர்க்கின்றாயோ?

பண்டைய காலம் போல் மாலையில்
தாக்குதலை நிறுத்தலாமே!

நட்பை பரிமாறலாமே!

உன் குரல் கேட்டால் மிதக்கும்
என் மனம் வானத்தில்.



ஆனால் நீ யாரென்று கேட்டதும்,
நின்று விட்டது இதயம்.,

துடித்தபடி கேட்டதென் இதயம்,
அவளுக்கு நீ யாரென்று.

அவளுக்கு நீ யாரென்று,
புரிய வை.

புரிய வை,
உன் மனதை.

உனக்குள் இருக்கும் அவள்
மனதில் நீ புகுவாய்..

என்சொல்லி துடித்தது இதயம்.

சொல்ல முடியாமல்
தவிக்கின்றதென் மனம்.

எண்ணத்தின் ஓடத்தில்,

காதல் கோட்டையின்
சான்றிதழ் போல்............

எனக்கு.........?


ஒரு நம்பிக்கை..
யோகம் தானாய் வரும் என்று...


ஆனாலும் முயாலாமல்...
கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாமா..

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.



kulandhaivels@gmail.com